மீண்டும் மீண்டும்..
எத்தனை தடவை...
விழ விழ எழுந்தோம்
வீறு கொண்டெழுந்தோம்
விழுப்புண் ஆறுமுன்
வீச்சமாய் எழுந்தோம்
சுருக்கிட்டு அழுத்தியும்
திமிறியெழுந்தோம்
அடக்க இது காளையல்ல
உணர்வு!!
நீதி கேட்கும் உணர்வு!
பரம்பரை தேடும் உணர்வு!
நிலம் காக்கும் உணர்வு!
இனம் காக்கும் உணர்வு!
மொழி காக்கும் உணர்வு!
இருப்பும் அடையாளமும்
தொலைய விடா உணர்வு!
குட்டியை மாடியிலிறுக்கும்
பாதுகாப்புணர்வு
விலங்குக்கே இருக்குமென்றால்....
அறிவெனும் கோலால்
போர் நடத்தும் மனிதா!
தடுப்பதும் பெறுவதும்
உன் உரிமை
உன் கடமையும்...
எத்தனை தடவை
இன்னும் விழுவாய்....
நரிகள் ஊளையிடும்
நாய்கள் குரைக்கும்
ஓலங்கள் காதடைக்கும்
அவலங்கள் நெஞ்சடைக்கும்
விழுவாயா??
அது நடந்தால்...
நீ அடிமை
தாண்டினால் வரலாறுனக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக