சனி, 15 மார்ச், 2014

நம்மோடு நாமாடும் வாழ்க்கை

நம்மோடு நாமாடும் வாழ்க்கை  
அதில் நம் தேடல் என்றும் பொருளானது 


வேண்டும் வேண்டும் என நினைக்கும் 
மனம் தாண்டும் எல்லை சுட்டிருக்கும் 
மீண்டும் மீண்டும் எனத் துடிக்கும் 
பல ஆசை  வந்து அலைக்கழிக்கும் 


மெய் சொல்வதாலே நாம் பொய்யாவதா 
பொய் போர்த்ததெல்லாம் மெய்யாவதா
உறவென்று பகையே நமைச் சேர்ந்ததா 
நம்மோடு நாமே முரண் கொள்வதா 


நிலவோடு இருளும் சினம் கொள்வதா 
கனவோடு காட்சி தவறாவதா 
உணர்வோடு அறிவும் குறை சொல்வதா 
வாழ்வோடு வினையும் இணைந்தாடுதா 


விடியாத இரவென்று ஒன்றில்லையே
மலராத பூவென்று ஒன்றில்லையே  
கணமொன்றில் வந்து கவர்ந்திடும் மரணம் 
எமை வந்து வென்று சிந்தனை கொண்டு 
புரியாத புதிர் போட்டு கலைந்தோடுதே 

v.alvit.
01.03.2014.

கருத்துகள் இல்லை: