புதன், 3 ஆகஸ்ட், 2016

கரம் தா.

வானம் உனக்குப் பிரமிப்பாயிருக்கிறதா?
அதன் எல்லையற்ற பரப்பளவும்
தொட்டுவிட முடியாத நிறக் கலவைகளும்
அலையலையாக மிதந்து கொண்டிருக்கும்
மேகத் திரள்களும்
அதனூடே பிரகாசிக்கும் முழு நிலவும்
உன்னை மெய்மறக்கச் செய்கின்றனவா?

லயித்திரு!
உன்னை மகிழ்விக்கும்
சிந்தனைக்குள் மிதக்கவைக்கும்
தெரிவொன்றில் கலந்திரு!

என் பிரிய சிசுவே!

உனது கற்பனைகளை
மொழி பெயர்க்க முயல்கிறேன்
உனது கனவுகளை மெய்ப்படுத்த விழைகிறேன்

எனக்கொரு கரம் தா!
என்னையும் தாங்கி
நீ பற்றி எழுந்துவிட.

வி. அல்விற்.
30.01.2016.

கருத்துகள் இல்லை: