மலரின் வழி கீழிறங்கும்
சிறுதண்டிலேதான்
முட்கள் அமர்ந்திருக்கின்றன
தொடுபவனைக் குறிபார்த்து
மலரின் மேலிருந்தே
பொய் முட்களால் கிழித்து
சுருழ வைக்கும்
கலையை
நீ கற்றுக் கொண்ட
மூலத்தை
ஆராய்ந்து வியப்பதில்
வேதனையும் மறந்து விடுகிறது.

வி. அல்விற்.
29.08.2014.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக