அன்பு.
கூர்மையானது
உன் வார்த்தைகள்
மட்டுமே என்பேன்
அதன் குறியும் ஆழமும்
அறியாது
நீ எறிவதால்
அன்பெனும்
கவசம் மட்டும்
இல்லாதிருந்திருந்தால்
இறந்து
இறக்க வைத்திருந்திருப்பேன்
எப்போதோ.
வி.அல்விற்.
18.01.2015.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக