திங்கள், 20 ஆகஸ்ட், 2012

கேட்பதும் கொடுப்பதும்
எதிர்பார்ப்பதும் பெறுதலும்
வாழ்வதும் தொடர்வதும்
அன்பின் பிணைப்பில்
தளம்பும் அடிப்படை
சிதறல்கள்
மெதுவாக வெளியேறும்
நம்பிக்கை
உதறல்களில் வார்த்தைகள்
வான வேடிக்கையாய்

மேலேறிக் கிளம்ப
உறவுகள் வெடித்துச் சிதறுகின்றன
அழகிழந்து அசிங்கமாய்
அன்பு கொளுக்கியாய்
மட்டுமே தெரிகிறது
வாழ்வு தாமரையிலையாய்
தேடி மிதக்கிறது
பிடிமானத்தை
தேடி அலைகிறது
மனம் பூமியில்
இருக்கும் ஒரு வாழ்வில்
உண்மை தேடி
நீண்டு திரிந்தும்
ஏமாற்றமெனும் மிச்சத்தை
முண்டி விழுங்கி
மீண்டும் மீண்டும்
தொடங்கும்
ஓர் நம்பிக்கை நாடி
விழுந்து எழுந்தும்
ஓர் நப்பாசையுடன்....

கருத்துகள் இல்லை: