கற்றாளை முட் செருகலாய்
குற்றங்கள் உறுத்தும் போது
தொடர்பாடல் துக்கமுறுகிறது
உண்மையோடு பேசுதல்
அவசியமாகிற வேளை
தடுக்கும் "நான்" கள்
அவலப்பட்டு நிற்கின்றன
வெளிப்படைகள் தீந்து
தீர்வுகள் பொசுங்கிப் போகின்றன
அமுங்கியிருக்கும் பதங்கள்
அலறலாய் வெடிக்கையில்
கேள்விக் குறிகள்
இடைவெளியை நிரப்புகின்றன
சோகத்தோடு....
வி.அல்விற்.