சனி, 6 ஏப்ரல், 2013

முரண்கள்


முரண்கள் முடிச்சிட்டுக் கொண்டே செல்கின்றன 
பேசாத் தருணங்கள் நலமாயுள்ளன 
பேசும் தருணங்கள் தரும் ரணம் 
வடுவாகிப் போகிறது 
நினைவிழந்து நிலைகுலையும் நிலை 
மாறித் திரும்பும் நாள் வரும்
அன்று நினைவுகள் கனமாகி 
கணங்கள் யுகமாகி 
நிதமும் கொல்லும் 
அது வரை...
புரியாத மனிதராய் சுகித்திருங்கள்

வி. அல்விற்.
02.04.2013.

கருத்துகள் இல்லை: