முரண்கள் முடிச்சிட்டுக் கொண்டே செல்கின்றன
பேசாத் தருணங்கள் நலமாயுள்ளன
பேசும் தருணங்கள் தரும் ரணம்
வடுவாகிப் போகிறது
நினைவிழந்து நிலைகுலையும் நிலை
மாறித் திரும்பும் நாள் வரும்
அன்று நினைவுகள் கனமாகி
கணங்கள் யுகமாகி
நிதமும் கொல்லும்
அது வரை...
புரியாத மனிதராய் சுகித்திருங்கள்
வி. அல்விற்.
02.04.2013.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக