பூங்கா.
மூடப்பட்டுள்ளது
கோபக்கதவுகளால்
கனதிப் பூட்டுக்கொண்டு
ஒரு சிக்கற் பூங்கா.
முன்பெல்லாம்
சிவப்பும் மஞ்சளும்
பச்சையுமாய்
நிறைந்திருந்த
தோட்டமது.
நீரூற்ற மறந்த
மரங்களின்
மறுத்து நிற்கும்
துளிர்கள் போல
காலம் சிதைத்த வாழ்வு
மொட்டையாகி விடக்
காத்திருக்கிறது.
மெல்லிதான
ஒரு புன்னகையில்
அல்லது வார்த்தையில்
ஒரு பூப் பூக்குமாயின்
அதை மறுப்பானேன்?
முட்களைத் தாண்டிய
மலர்களும்
கனிகளும்
காத்திருக்கின்றன
பறிப்புக்களுக்காய்.
காலடியில்
வெறும் சருகுகளாய்
குவிந்திருப்பவை
உரமாகட்டும்
அமைதிப் பூங்காவின்
கவின் மலர்களுக்காய்.
வி. அல்விற்.
18.03.2015.