உலகம் அழகாகத்தான் இருக்கிறது
நீ புன்னகைக்கும் போது
கண்களில் ஓர் ஏகாந்த ஒளி
புதைந்திருக்குமோ துன்பம்?
இருக்கலாம்
இருக்கக்கூடாது என்றே நம்புகிறேன்
தனித்திருத்தலின் பேரானந்தம்
உன் அசைவுகளில் தெரிகிறதே!
பசுமைக்கும் கருமைக்குமிடையில்
நீ பயணிப்பதாக உணர்கிறேன்
ஒரு கனவுலகவாசி போல.
உன் அடைவுகளுக்காக
ஏமாற்றத்துடன் தவமிருப்பதை
ஒத்தி வைத்திருக்கிறேன்.
ஆனாலும்,
யதார்த்தம் மறுக்கும் உன்னை
இன்னும்கூட
உயிரறுக்கும் வலியுடன்
பின் தொடர்கின்றேன்
அந்திமகால
இறந்துபோன நம்பிக்கைகளுடன்
கொஞ்சம் கொஞ்சமாய்
என்னைத் தொலைத்தபடி.
வி. அல்விற்.
27.02.2015.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக