புதன், 4 பிப்ரவரி, 2015

வருகிறார்கள்...
போகிறார்கள்... 

´Shoes'
´A pair of shoes'
சொல்லிக்...... 
"கொடுக்கிறார்கள்"
சொல்லிக் கொடுப்பதைச்
சொல்லக் கேட்கவே
விழையும் மனிதர்கள்.

சூடு பறக்கும் மணற்பரப்பிலும்
கொதித்துருகும் தார்த் தெருக்களிலும் 
வெறுங்கால் தேய்த்து
நடந்தவர்கள் நாங்கள்.

எங்கள் தெருக்களை 
திருப்பிக் கொடுக்க வையுங்கள்
உங்களால் முடிந்தால்.
கடைசிக் காலத்திலாவது 
அதன் மக்கள் 
தம் தாய் மடியில் புதைந்து விட.

உங்கள் நாவில் தவழ்வது
மொழி மட்டுமே.
அதை எமது சந்ததி
தானாகவே கற்றுக்கொள்ளும்
தேவைக்கேற்ப.

வி. அல்விற்.

31.01.2015

கருத்துகள் இல்லை: