திங்கள், 9 பிப்ரவரி, 2015

சொற்கலை.

சொற்கலை.

சொற்கலை புரியாத போது 
சொல்லியங்கள் 
கேள்வியில் முடிகின்றன

வார்த்தைகளால் வசப்படும் 
வாழ்வும் உண்மையாயில்லை
வசப்படுத்துதலில் தோற்பதை
அனுசரித்தலில் வெற்றிப்படுத்தி 
ஒப்புக்கு மகிழ்கின்றனர்.

பொய்மையின் மகிழ்வு 
பொசுக்கென்று எரிப்பதால் 
உண்மை விரும்பிகள் 
இன்னும் தனிமையிலேயே.....


09.02.2015.

கருத்துகள் இல்லை: