சொற்கலை.
சொற்கலை புரியாத போது
சொல்லியங்கள்
கேள்வியில் முடிகின்றன
வார்த்தைகளால் வசப்படும்
வாழ்வும் உண்மையாயில்லை
வசப்படுத்துதலில் தோற்பதை
அனுசரித்தலில் வெற்றிப்படுத்தி
ஒப்புக்கு மகிழ்கின்றனர்.
பொய்மையின் மகிழ்வு
பொசுக்கென்று எரிப்பதால்
உண்மை விரும்பிகள்
இன்னும் தனிமையிலேயே.....
09.02.2015.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக