வெள்ளி, 21 டிசம்பர், 2012

வரம் ஒன்று வேண்டி....

வரம் ஒன்று வேண்டி தவமிருக்கிறேன்
கோடி கொட்டிக் கொடுக்க வேண்டிலேன்
பொன்னை குவித்துத் தரவும் வேண்டிலேன்
சாமரம் வீசும் வாழ்க்கையும் வேண்டிலேன்
பதவிக்கால் வேண்டியும் வேண்டிலேன்
புகழ் முடி தலைமேல் என்றுமே வேண்டிலேன்
உள்ளபடி தலை சாய்த்தால் உறங்கிப்போகும்
மன அமைதி ஒன்று வேண்டி
தவமிருக்கிறேன்...

கருத்துகள் இல்லை: