எரிதழலில் வெந்து அழிந்த
எரியாக் கனவுத் தேசம்
எத்தனை முகம் கொண்டு
பகுத்தின்று எறிந்திட்டதே
அத்தனையும் சிரம் கொளாது
பித்தராய்ப் பிதற்றுகின்றதே
குற்ற மெங்கணும் காணில்
சுற்றமது போய்விடுமே
பத்தோடு பதினொன்றாய்
வீழ்வதில் என்ன பலன்
பற்றோடு ஏற்றம் பெற
பெற்றிடுவீர் பெரு வீச்சம்
பட்ட மரமாச்சே பூமி
பட்டினியில் அழுந்துகிறதே
கத்து கடல் நந்தவனம்
கத்திப் பரிதவிக்கிறதே
விட்டகலாக் காட்சிகளே
வெஞ்சினத்தின் வேராயிற்றே
சித்தமெலாம் கலங்கி மீதி
செத்தவராய் திரிகின் றனரே
புத்தன் வந்து புத்தி சொல்லுவனோ
பெற்றவர் தொலைத்ததை
பெற்றுக் கொடுப்பானோ
பற்றும் வளைக்கரம் காத்திடுவானோ
எத்தகை பாவம் செய்த தென் மண்
இத்தனை உடலம் வீழ்வதற்கு
மந்தையாய் போகாதீர் மாண்புடையீர்
எந்தையும் தாயும் சேர்ந்த நம்மண்
சிந்தை தெளிவோடு கூர்வன செய்வீர்
மெத்தனம் பண்ணாது வித்தகம் செய்வீர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக