செவ்வாய், 21 மே, 2013

அந்த நாள்

மீண்டு வரும் இந்த நாளில் 
நம்பிக்கைகளும் பிடிப்புக்களும் 
உதிர்ந்து முடிந்தன 
தண்ணீர் காணா பாலை நிலமாயிற்று
வெறு வெளியில் 
ஈரமில்லா மனிதர்கள் 
தடிப்பான கால்களால் மிதித்து 
தமக்குள் மகிழ்ந்து கொண்டனர் 
ஆகாய வெளியெங்கும்
மோதி எழுந்த குரல்கள்
எந்தச் செவிப்பறையையும்
சென்றடையவேயில்லை
எழுதப்பட்ட மனித உரிமைச் சாசனங்கள்
மூடியபடியே கிடந்தன
உரிமைகளும் சுதந்திரமும்
வாழ்வும் வளமும்
பலமுள்ளவனுக்கே யென
கன்னத்திலறைந்து
சொல்லிப் போன நாளிது
நாகரிக உலகின் நிர்வாணம்
பிரபலப் படுத்தப்பட்ட நாளிது

வி.அல்விற்.

கருத்துகள் இல்லை: