புதன், 1 மே, 2013

எதிர்காலம்?

மடி வந்த நாள் முதல் 
இடைவிடாக் கனவுகள் 
கொடியாய் தொடர்ந்திடும் நலம் நாடி 
பிடி விரலுள் ஓடும் நம்பிக்கையில் 
பிடிபடும் வாழ்வில் வெற்றிக்கனி 
தொடு வானம் எட்டிடும் புகழொடு 
வலம் வரும் வீறு நடை காண 
உடலுருக்கி அகமுருக்கி
வாரியிறைத்து மகிழ்வித்து 
கூடவே மந்திரியாய் 
ஆக்கம் விளை சொல் கொடுத்து
பாதை போட்டும்
விடை தெரியாக் கேள்வியே
பல அன்னையர் முன்
பயமுறுத்தி நிற்கின்றது

கருத்துகள் இல்லை: