ஞாயிறு, 23 ஜூன், 2013

இல்லாத அப்பா!

அப்பா!
என் மௌனங்களுக்குள் உலா வருபவர் 
என் தயக்கங்களுக்கு காரணி 
என் இயலாமைகளின் மூலதாரி
இல்லாத அப்பாவுக்காய் 
எனக்கு மட்டும் ஏன் இல்லை யென  
கரைந்தழுத இரவுகள் 
கரையாமல் நினைவில் இன்றும் 
பள்ளிக்குக் கூட்டிச் செல்ல இல்லாத அப்பா 
பாடம் சொல்லித் தர இல்லாத அப்பா 
கைபிடித்து ஊர் காட்ட இல்லாத அப்பா 
கதை ஏதும் சொல்ல இல்லாத அப்பா 
தூக்கித் தோளில் வைக்க இல்லாத அப்பா 
முத்தமிட்டு மகிழ இல்லாத அப்பா 
என் கதை கேட்டுப் பதில்தர இல்லாத அப்பா 
என் தேவையறிய இல்லாத அப்பா 
கனவுகளில் கூட காண முடியா அப்பா 
நினைவுகளில் கலங்கலாய் 
அங்கொன்று  இங்கொன்றாய் 
அடையாளம் காண முடியாமல் 
அப்பாவின் இல்லாமையின் அதீதத் துணிச்சல்
காலத்துடன் கலந்து
என்னை வளர்த்து விட்டிருக்கிறது 
இல்லாத அப்பாவுக்காய் எழுத 
என்னிடம் ஏதுமில்லை பதிவுகளாய்....
ஏக்கத்தைத் தவிர 

வி. அல்விற்.
15.06.2013.

கருத்துகள் இல்லை: