புதன், 7 ஆகஸ்ட், 2013

நெருப்பாய் கருக்கிடு

நாடெட்டும் சிதைந்தும்
நாவடக்கா நஞ்சினோர்  
நனி செறி நளினமொடு
நவின்றிடும் வெஞ்சொல் காணீர் 
நயன் தூக்கியே நஞ்சுண்டோர்  
நாணுவர் நமைக் கண்டு 
நறுக்கிடு இறைவா - இவர் தலைச் 
செருக்கினை நெருப்பாய் 
கருக்கிடு - செந்தமிழ் 
பைந்தமிழாய் தளிர்த்திடவே!

கருத்துகள் இல்லை: