புதன், 7 ஆகஸ்ட், 2013

கடவுளின் பிரதிநிதிகள்

வெள்ளையாய் மலர்ந்து சிரித்து 
அதையே திருப்பித் தேடுவதில் 
காணாத கடவுளின் பிரதிநிதி நீங்கள் 

துக்கத்தின் விம்மல்களையும் 
மகிழ்வின் எல்லைகளையும் மறைக்கவியலா 
பளிங்கு முக ஓவியங்கள் நீங்கள் 

பொய்மைகளைப் புரிய வியலாது 
மெய்யாகவே திணறும் 
உண்மைகளின் சாட்சிகள் நீங்கள்

வார்த்தைகளின் சுழற்சிகளில்
சிக்கிச் சுழன்று கேள்விகளோடு
பறக்கும் பட்டாம் பூச்சிகள் நீங்கள்

'பெரியவர்கள்' ஆகும் அவதாரத்துள்
மாறா வடுக்களுடன் நுழைந்து
முகமிழந்து போகும் குழந்தைகள் நீங்கள்.

வி.அல்விற்.
07.08.2013.

கருத்துகள் இல்லை: