வெள்ளையாய் மலர்ந்து சிரித்து
அதையே திருப்பித் தேடுவதில்
காணாத கடவுளின் பிரதிநிதி நீங்கள்
துக்கத்தின் விம்மல்களையும்
மகிழ்வின் எல்லைகளையும் மறைக்கவியலா
பளிங்கு முக ஓவியங்கள் நீங்கள்
பொய்மைகளைப் புரிய வியலாது
மெய்யாகவே திணறும்
உண்மைகளின் சாட்சிகள் நீங்கள்
வார்த்தைகளின் சுழற்சிகளில்
சிக்கிச் சுழன்று கேள்விகளோடு
பறக்கும் பட்டாம் பூச்சிகள் நீங்கள்
'பெரியவர்கள்' ஆகும் அவதாரத்துள்
மாறா வடுக்களுடன் நுழைந்து
முகமிழந்து போகும் குழந்தைகள் நீங்கள்.
வி.அல்விற்.
07.08.2013.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக