புதன், 7 ஆகஸ்ட், 2013

செல்வம்

ஆயிரம் கோடி விண்மீன்களின் ஒளி 
பகலைச் சொந்தமாக்கும் கதிரவன் இளநகை 
தண்ணொளி பரப்பும் மதி முக நளினம் 
நானே யென்று ஓங்கி ஒலிக்கும் கடல் 
வாவென்று மயக்கும் வருடல் காற்று 
பட்டதும் சிலிர்க்கும் ஆகாயத் தூவல்கள் 
எல்லாமே அடுத்தடுத்த நிலையில் தான் 
எல்லாம் மறந்து சிரிக்கும் 
என் குழந்தையின் முன்னால்.

வி. அல்விற்.
07.08.2013.