ஆயிரம் கோடி விண்மீன்களின் ஒளி
பகலைச் சொந்தமாக்கும் கதிரவன் இளநகை
தண்ணொளி பரப்பும் மதி முக நளினம்
நானே யென்று ஓங்கி ஒலிக்கும் கடல்
வாவென்று மயக்கும் வருடல் காற்று
பட்டதும் சிலிர்க்கும் ஆகாயத் தூவல்கள்
எல்லாமே அடுத்தடுத்த நிலையில் தான்
எல்லாம் மறந்து சிரிக்கும்
என் குழந்தையின் முன்னால்.
வி. அல்விற்.
07.08.2013.
1 கருத்து:
thaaymai varam:)
கருத்துரையிடுக