புதன், 7 ஆகஸ்ட், 2013

ஏக்கம்

நேற்று முன்தினம் தபால்காரன் 
கடந்து போனான் 
வராத அஞ்சலால் முகம் மாறி 
இவன் உள்ளே போனான் 
இன்று தபால்காரன் கடந்து போனபின் 
இவர்கள் வீடு வந்து சேர்ந்தனர் 
பெட்டி திறந்து கண்களில் நீர் கோர்த்தான் 
வராத அஞ்சலுக்காய் மௌனமாய் 
பிஞ்சு மனம் உடைவதில் 
அக்கறையற்ற பொருளுலகம் 
அனுப்ப விரும்பா அஞ்சலுக்காய்
நாளைக்கும் இவன் காத்திருப்பான்...

வி.அல்விற்.
05.08.2013.

கருத்துகள் இல்லை: