நேற்று முன்தினம் தபால்காரன்
கடந்து போனான்
வராத அஞ்சலால் முகம் மாறி
இவன் உள்ளே போனான்
இன்று தபால்காரன் கடந்து போனபின்
இவர்கள் வீடு வந்து சேர்ந்தனர்
பெட்டி திறந்து கண்களில் நீர் கோர்த்தான்
வராத அஞ்சலுக்காய் மௌனமாய்
பிஞ்சு மனம் உடைவதில்
அக்கறையற்ற பொருளுலகம்
அனுப்ப விரும்பா அஞ்சலுக்காய்
நாளைக்கும் இவன் காத்திருப்பான்...
வி.அல்விற்.
05.08.2013.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக