புதன், 7 ஆகஸ்ட், 2013

உயர் நட்பு

பேச முடிந்த பொழுதுகளில் இனிமையாய் 
நாவெழாத் தருணங்களில் வார்த்தைகளாய் 
சிந்தை கலங்குகையில் தெளிவுரையாய் 
துக்கம் தூக்கம் தொலைக்கையில் தலையணையாய் 
சொல்லவியலா சமயங்களில் நிரப்புகையாய் 
கண் வழி தேவைகளை அறிபவராய் 
நல்லாலோசனைக்கு ஒரு மந்திரியாய் 
தவறு இடித்துரைக்கும் நல்லாசானாய் 
ஓர் உயர் நட்பு யார்க்கும் கிடைத்திடல் வேண்டும் 

வி.அல்விற்.
05.08.2013.