பேச முடிந்த பொழுதுகளில் இனிமையாய்
நாவெழாத் தருணங்களில் வார்த்தைகளாய்
சிந்தை கலங்குகையில் தெளிவுரையாய்
துக்கம் தூக்கம் தொலைக்கையில் தலையணையாய்
சொல்லவியலா சமயங்களில் நிரப்புகையாய்
கண் வழி தேவைகளை அறிபவராய்
நல்லாலோசனைக்கு ஒரு மந்திரியாய்
தவறு இடித்துரைக்கும் நல்லாசானாய்
ஓர் உயர் நட்பு யார்க்கும் கிடைத்திடல் வேண்டும்
வி.அல்விற்.
05.08.2013.
1 கருத்து:
aam:)
கருத்துரையிடுக