பாரமேற்றியாக ஆக்கியுள்ளது
இந்த சமூகமுன்னை.
சுருங்கியுள்ள நெற்றிக் கோடுகள்
சிந்தனைகளை சுருட்டியுள்ளனவோ
உனக்கான அளவீடுகளை
மட்டுப்படுத்த முயற்சிக்கிறது.
இப்பொருளுலகம்.
ஆழ்ந்து மூச்செறியவும்
அமைதியாய்ச் சிந்திக்கவும்
அவகாசமற்ற பெருஞ்சந்தையில்
உன் குரலடங்கிக் கிடக்கின்றது
வாதிட மனமின்றி.
அழுத்தங்களினாலான துக்கங்கள்
கடுஞ்சிறைப்பட்டிருக்கின்றன
விடுபட வழியின்றி.
பொறு!
பூட்டுகள் திறக்கப்படும்
அதுவும் உன்னாலேயே.
சிந்தனைகளைக் கிளறிக் கொண்டேயிரு!
குப்பைகளின் நாற்றமும்
பூக்களின் நறுமணமுமாயிருக்கும்
நீ கால் வைத்துள்ள பூமியைக்
கிளறிக் கொண்டேயிரு!
உனக்கான பாதை கிடைக்கும்.
வி.அல்விற்.
19.06.2015.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக