கொடுப்பதும் நாம்
பெறுவதும் நாம்
முகமறிந்த மனிதரிடையே
முகம் மறைப்பதும் நாம்
வரவை கணக்கு வைப்பதற்குள்
செலவை வைப்பதும் நாம்
எல்லையற்ற தியாகங்களிடையே
ஏளனப்பட்டு நிற்பதும் நாம்
எகத்தாளமாய் நின்று கொண்டு
ஏமாந்து தொலைப்பதும் நாம்
ஓ!!!!!
பரம பிதாவே!
எத்தனை காலம்தான்
நாம் அறியாமல் தவறுவது?
:(
வி. அல்விற்.
19.06.2015.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக