ஞாயிறு, 12 ஜூலை, 2015

இதழ்விரித்து..

எத்தனை நாளோ தனை மறந்து
பித்தமே கொண்டு மடிந்திருந்து
நித்தமுன் நினைப்பில் நொந்திருக்க
அத்தனை முத்துக்கள் கைநிறைய
சொத்துக்களாக சேர்த்துவர
சித்தமும் தெளிந்து சிங்காரித்து
மொத்தமாய் மஞ்சள் பூசிக்கொண்டு
கைத்தலம் பற்றும் சேதி சொல்ல
காத்திருக்கிறாயோ இதழ்விரித்து?

வி. அல்விற்.
10.07.2015.



கருத்துகள் இல்லை: