வியாழன், 27 செப்டம்பர், 2012
அருட் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்
"மண்ணுலகில் தீ மூட்டவே வந்தேன். அது இப்போதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்"
லூக்கா 12 :49 .
ஓடு மீன் ஓடி உறு மீன் வருமளவும் வாடி
ஒற்றைக் காலில் நின்ற கொக்காய் மக்கள்
ஒருமித்து வரவேற்ற ஒப்பற்ற செல்வம் நீர்
ஒளியாய் வந்த தூதன் நீர்
ஒரு சில ஆண்டுகளே!! நீளாதொவென
ஓடியே போயிற்று
ஒன்றா இரண்டா என் நினைவுச் சுழலில்
ஓராயிரம் கதைகள் ஆழக் கிடக்கின்றன
ஒடுங்கிய சேவைகளுக்கு
ஓர் அகலப் பாதை போட்டவர் நீர்
ஓர் இளம் தலைமுறைக்கு
ஒப்பற்ற மாதிரி நீர்
சிந்தனைச் சிதறல்களுக்கு
சிறப்பு வடிவம் கொடுத்தவர் நீர்
சிற்பியாய் எமைப் பார்த்துச்
செதுக்கி வடித்தவர் நீர்
செல்லும் முன் புத்தாலயம்
செம்மையாய் எழுப்பியவர் நீர்
செழுமையாய் உறைந்து விட்டீர்
செல்ல முடியாமல் பூட்டி வைத்துள்ளோம்
செயற்கரிய சேவைக்காய் நாற்பானாண்டுகள்
சென்றோடிய இந்நாளில்
செய்பணி செவ்வனே சிறந்தோங்க
செயல் புரிய நலமளிக்க
புனிதர் அருள் வேண்டி வாழ்த்தி நிற்கின்றேன்
வாழ்க! நலமுடன் நீடூழி நீர் வாழ்க!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக