வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

உயிர்க்காதல்

காதலாகிக் கசிந்துருகி
கனவிலே புரண்டு
நனவிலே இணைந்து
காலையிலே காதல்
தேநீருடன் கலந்து
மதியத்திலே காதல்
அலைபேசியில் குழைந்து
மாலையிலே காதல் 
சிறு ஊடலாகி முறுகி
கண்களில் மேகங்கள்
சூழ்ந்துவரக் காண்கையில்
தலைப்பையே மாற்றி
நகைக்க வைக்கும்
வித்தையைச் செய்கிறது
அதே காதல்
துன்பங்கள் இறுக்குகையில்
ஓடிவிடாது இன்னும் இறுக்கமாய்
அருகமர்ந்து இருக்கிறது
தளராது பாதையை மறிக்கும்
இடர்களை யெல்லாம்
தூக்கிப்போட்டு நடக்கிறது
ஒரு முறையல்ல இருமுறையல்ல
எத்தனை தடவை மன்னிக்கிறது
எத்தனை தடவை தட்டிக் கொடுக்கிறது
எத்தனை தடவை ஏற்றுக் கொள்ளுகிறது
நம் பலங்களையும் பலவீனங்களையும்
சமாந்தரப்படுத்தி விடுகிறது
நம் காதல்
இறுதிவரை கொண்டு சென்று
இருக்குமட்டும் பேசி நிற்கும்
நம் காதலை
இன்று மட்டும் சொல்லிப் போக
இது என்ன
தவணை முறைக் காதலா?
வி.அல்விற்.
14.02.2014.

கருத்துகள் இல்லை: