செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

அவர்களையும் தீண்டும் தென்றல்..

வானம் தெளியாயிருந்தும் 
கருமுகில்கள் கூடிக் கூடி 
கவிந்திருந்து பேசிக் கொண்டிருந்தன 
வெளிச்சம் புக முடியாதபடி 
சோவென்று கொட்டி விடும் பயத்தை 
உள்ளேயே உருவாக்கியிருந்தன 
தெப்பமாக நனைந்து விடுவோமோ 
என்ற பயம் தடுத்திருந்தது 
ஒரு கணம் சூரியனும் 
மறுகணம் இருள் மேகங்களுமான 
கண்ணாமூச்சி விளையாட்டில்
இன்று சூரியனின் பிரகாசத்தில்
இலைகளின் மீதான பனித்துளிகள்
சிலிர்த்து வீழ்கின்றன
வெளிவந்து அண்ணார்ந்து பார்த்து
மூச்சை உள்ளே இழுத்து ஆழமாக சுவாசிக்கையில்
காற்று எல்லோரையும் போல
அவர்களையும் தடவிச் செல்லுகிறது
ஆதரவாக......

வி.அல்விற்.
18.02.2014.

கருத்துகள் இல்லை: