நம்மோடு நாமாடும் வாழ்க்கை அதில்
நம் தேடல் என்றும் பொருளானது
வேண்டும் வேண்டும் என நினைக்கும்
மனம் தாண்டும் எல்லை சுட்டிருக்கும்
மீண்டும் மீண்டும் எனத் துடிக்கும்
பல ஆசை வந்து அலைக்கழிக்கும்
மெய் சொல்வதாலே நாம் பொய்யாவதா
பொய் போர்த்ததெல்லாம் மெய்யாவதா
உறவென்று பகையே நமைச் சேர்ந்ததா
நம்மோடு நாமே முரண் கொள்வதா
நிலவோடு இருளும் சினம் கொள்வதா
கனவோடு காட்சி தவறாவதா
உணர்வோடு அறிவும் குறை சொல்வதா
வாழ்வோடு வினையும் இணைந்தாடுதா
விடியாத இரவென்று ஒன்றில்லையே
மலராத பூவென்று ஒன்றில்லையே
கணமொன்றில் வந்து கவர்ந்திடும் மரணம்
எமை வந்து வென்று சிந்தனை கொண்டு
புரியாத புதிர் போட்டு கலைந்தோடுதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக