சனி, 15 மார்ச், 2014

காடு பெருத்திருக்கிறது

காடு பெருத்திருக்கிறது

காடு பெருத்திருக்கிறது அங்கே
நெருக்கி வைத்தாற்போல அமைந்திருக்கும் 
மூங்கில்களின் உரசல்கள் காற்றலையில்
காதுகளைக் கிழிக்கின்றன 
கானங்களாய் செவியேறுவதற்குப் பதில்
எங்கோ தூரத்தில் ஊளையிடும் நரிகள்
கும்மிருட்டுப் பயங்கரத்துக்கு வலுச் சேர்க்கின்றன
பாதையைத் தொலைத்த பயணத்தின் நீட்சி
களைப்போடு கண்களை வெளிச்சத்தைத்
தேடித் திகைத்து நிற்க வைக்கின்றது
நான்கு மூங்கில் தடிகளை
தோட்டத்திலே நட்டு வைத்திருந்தால்
இசை கேட்டிருக்குமோ?

வி.அல்விற்.
12.03.2014.

கருத்துகள் இல்லை: