சனி, 15 மார்ச், 2014

வழித்துணை.

வழித்துணை! 

தனித்திருக்கும் இவ்வேளை 
கடினமாயில்லை
மரங்களில் தெரியும் 
அம்மாவின் பலகோண 
முக பாவங்களும்
கிளைகளிலே தெறித்துத் தெரியும்
அக்காக்களின் கோபங்களும்
வடிவம் சேர்த்துக் கொடுக்கின்றன
வழிப்பாதைக்கு
இதே போன்றதொரு
தெருக்கிடங்கிலே துள்ளி விழுந்த
மிதி வண்டியிலிருந்து
தூக்கியெறியப்பட்ட காயங்கள்
இன்னும் கூடவே வருகின்றன
மறந்து விடாதிருக்கும்படி
கொடுத்து வைத்தவள் நான்
தனிமை என்றும் என்னோடு
போராடியதில்லை
வழித்துணையாய்
என் ஞாபகங்கள் சேர்ந்திருக்கும்வரை.

வி.அல்விற்.
14.03.2014.

கருத்துகள் இல்லை: