சனி, 15 மார்ச், 2014

தூது.

இருட்டுள் தெரியும் 
மின்மினிப் பூச்சிகளின் வெளிச்சத்தில் 
வாழப் பழகி விட்டவர்கள் நாங்கள் 
அவ்வப்போது 
கொஞ்சம் முகில் விலத்தி 
எட்டிப் பார்க்கின்றது நிலவொளி 
மனம் பிசையும் நேரங்களில் 
பணத் தாள்களில் எழுதப்படும் 
நம் பாசத்துக்கான தூதில்.

வி.அல்விற்.
09.03.2014.

கருத்துகள் இல்லை: