இருட்டுள் தெரியும்
மின்மினிப் பூச்சிகளின் வெளிச்சத்தில்
வாழப் பழகி விட்டவர்கள் நாங்கள்
அவ்வப்போது
கொஞ்சம் முகில் விலத்தி
எட்டிப் பார்க்கின்றது நிலவொளி
மனம் பிசையும் நேரங்களில்
பணத் தாள்களில் எழுதப்படும்
நம் பாசத்துக்கான தூதில்.
வி.அல்விற்.
09.03.2014.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக