சனி, 1 மார்ச், 2014

பயம்.

பயம்.

இயற்கையின் நியதிகள் உள்ளூர 
அறிவார்ந்து வாதித்துக் கிடப்பினும் 
அனுபவங்கள் நேரிலே அறைகையில் 
தடுமாறிப் போகிறது உணர்வுகள்
ஒரு கணத்துள் நிகழ்ந்து விடும் 
எதிர்பாரா விபத்துப் போல 
தெரிகின்ற மரணத்துடன் 
தெரியாத நாள் வரை 
யாருக்கும் விடை தெரியாத
மரணம் எப்படி உலுப்பாட்டிப் போகிறது
அக்கணம் வரை
நாங்கள் இப்படியே........

வி.அல்விற்.
22.02.2014.

கருத்துகள் இல்லை: