வியாழன், 27 மார்ச், 2014

முன்பெல்லாம்...

முன்பெல்லாம் 
ஒரு வார்த்தை போதும் 
ஆறு கண்வழி பெருக்கெடுத்தோட 
முன்பெல்லாம் 
சுண்டு விரல் நோவு போதும் 
அதைத் தூக்கிக் கொண்டு 
செல்லம் கொஞ்ச 
முன்பெல்லாம் 
சிறு குழப்பம் போதும் 
நாட்கணக்காய் குமுறியழ 
முன்பெல்லாம்
சின்னச் சிக்கல் போதும்
மணித்தியாலக் கணக்காய்
மண்டையை உடைக்க
முன்பெல்லாம்
மிகப் பெரிதாய்த் தோன்றிய
அத்தனையும்
பாறாங் கற்களாய்
பாரமாய் அழுத்தி
என்னைக் கடந்து போயின
இப்போதோ
பாறைகளூடாகப் பயணிக்கும் ஆறாய்
கடந்து செல்லுகின்றேன்
எதையும் யாரிடமும் எதிர்பாராது.

வி.அல்விற்.
25.03.2014.

கருத்துகள் இல்லை: