வியாழன், 27 மார்ச், 2014

அத்தனை முறையும்.

அத்தனை முறையும்.
கால் பார்த்து நடந்தேனென்
காலடி அதிர்வு உனைத் தாக்கிடாது
காற்றிலே பேசினேன் கதைபல நீ 
காயமின்றி பூமியைத் தொடுவதற்கு
தொட்டுத் தடவி இன்புற்றேன் நீ
துள்ளி விளையாடுகையில் மகிழ்வுற்றேன்
தொட்டதெல்லாம் துலங்க விருப்புற்றேன் நீ
எட்டுவதற்கு ஏணியாய் சாய்ந்திருப்பேன்
முத்தமழை பெய்து என் மேனியிலே
மொத்தமாய்க் கொட்டுகிறாய் அன்பினை
மெய்ப்படவே நின் கனவனைத்தும்
மேதினியில் என்றும் நானிருப்பேன்
நித்தமும் செப்பனிடுமுன் பாதையை
நித்திரையும் மறந்து கூர்ந்திடும் மனம்
நித்திலமே செல்வக் களஞ்சியமே உலகு
நிந்தியா வாழ்வாய் உனக்கருகிருப்பேன்
எத்தனை முறை வீழ்ந்தென்ன
அத்தனை முறையும் உன்னைத்
தென்றலும் தீண்டிக் கீறிடாது
தொட்டுத் தூக்கிட நானிருப்பேன்
என்றுமே உன் அன்னையாய்.
வி.அல்விற்.
27.03.2014.

கருத்துகள் இல்லை: