வாழ்வின் கோடுகள்
இயற்கை வானிலும் கடலிலும் தரையிலும்
கொட்டி வைத்துள்ள அற்புதங்கள் போல
இல்லை இல்லை......
தூரிகை கொண்டு அதி நுட்பமாக
வரையப்பட்ட அழகோவியம் போல
இல்லை இல்லை.....
சிலந்தி தன்நூலிழைகளை தானே
கோர்த்து வைத்துப் பார்த்திருப்பதுபோல
மிக நுண்மையாக இழைக்கப்பட்டுள்ளது
மனித வாழ்வின் கோடுகள்
புத்தியுள்ளவன் தப்பித்துக் கொள்ளுகின்றான்
சிக்கிக் கொள்பவன் தொலைந்து போகிறான்
வி.அல்விற்.
25.02.2014.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக