பெருமை கொண்டோம்
பழமை பேசி
இனிமை கண்டோம்
புளித்ததை மீட்டு
காற்றில் கேட்டோம்
பழைய கானமொன்றை
கரகரக்கும் குரலில்
நெருப்பில் எழுந்தோம்
முகிலில் குளிர்ந்தோம்
தெளிந்தோடும் நீரூற்றினின்று
கொஞ்சம் தூரத்தில்
சேற்றைப் பூசியபடி
இன்னும் தேங்கித்தான் நிற்கின்றோம்
குட்டையாய்.
வி.அல்விற்.
06.03.2014.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக