சனி, 15 மார்ச், 2014

இல்லாத ஒன்று.

இல்லாத ஒன்று.

நிச்சயமற்ற இரவுகளும் பகல்களும் 
நீண்டு பயணிக்கின்றன
ஓடியும் பயனில்லை 
ஒளித்தும் பயனில்லை 
மூர்க்கமாய் எதிர்த்தும் 
வலுவிழந்த உயிரிகளாய் 
தொண்டையில் சிக்கிய 
கனலும் தீக் கட்டிகளை 
அவ்வப்போது கக்கி
அபயம் கோரி அந்தரித்து
அவிந்து கொண்டிருக்கும்
மனங்களை ஆற்றுவாரின்றி
இருக்கைகளைப் பற்றிக் கொண்டு
அவசரமாக விரைகின்ற
சுயநலப் பயணிகளிடம்
எப்படிக் கேட்பது
நீதியும் நியாயமும்?

வி.அல்விற்.
15.03.2014.

கருத்துகள் இல்லை: