சனி, 15 மார்ச், 2014

இந்த ஒரு நாள் மட்டும் எதற்கு?

இந்த ஒரு நாள் மட்டும் எதற்கு?

தாயாய்த் தாரமாய் 
மாமியாய் மருமகளாய் 
மைத்துனியாய் சித்தியாய் 
அத்தனை பாத்திரங்களையும் உள்ளே 
சொல்லிக் கொடுக்காமலேயே 
கச்சிதமாய் செய்து முடிக்கிறோம்
ஆனால் வெளியே மட்டும் இன்னும் 
பெண்ணுடல்கள் வீசப்பட்டுக் கிடக்கின்றன 
உடல் பலவீனத்தின் இயலாமையில்
உள்ளத்தின் பலங்களும் சிந்தனைகளும்
சிதைபட்டுப் பழிவாங்கப்படுகின்றன
உலக இயக்கத்தின் முதற் காரணிகள்
மிக இலகுவாக சீண்டப்படுகிறார்கள்
உணர்வுகளை மதியுங்கள்
சிந்தனைகளை ஏற்றுக் கொள்ளுங்கள்
வேறுபாட்டைக் களைந்து விடுங்கள்
பழிவாங்கலைத் தவிர்த்து விடுங்கள்
உங்களைப் போலவே அவர்களையும்
ஏற்றுக் கொள்ளுவீர்களாயின்
இந்த ஒரு நாள் மட்டும் எதற்கு
வாழ்த்துச் சொல்ல?

வி.அல்விற்.
07.03.2014.

கருத்துகள் இல்லை: