சனி, 1 மார்ச், 2014

கல்வி

கல்வி

காற்றுக் கூட சுதந்திரமாக 
தன்பாட்டில் அலைகிறது 
உறைந்திருக்கும் குளிரில் 
உயிர் காத்திருக்கும் வேர்கள் 
மரங்களுக்குச் செய்தியைப் 
பரிமாறிக் கொள்கின்றன 
தன்காலத்திலே இதழ்விரித்து 
மலர்களும் மணம் பரப்புகின்றன
மழைத்துளிகள் மேகங்களிடம்
அனுமதி வாங்கிக் கொண்டு
தரை தொட்டுப் பரவசப்படுத்துகின்றன
இயற்கை கற்றுக் கொடுக்கும்
இலவசப் பாடங்களை இரசிக்க மறந்து
இறுக்கிக் கட்டப்பட்ட
பெருச்சாளிகளின் திட்டத்தின் கீழ்
வெல்லும்படி இறக்கி விடப்பட்ட
மூச்சிரைக்க ஓடும் குதிரைகள் போல
சிரிக்க மறந்த இறுகிய முகங்களுடன்
கனவுகள் சுமக்கும் காலங்களில்
புத்தக மூட்டைகளை
சுமந்து செல்லுகின்றனர்
எம் குழந்தைகள்.

வி.அல்விற்.
26.02.2014.

கருத்துகள் இல்லை: