மல்லிகை மணம் அவிழ்க்கும்
பந்தலின் கீழிருந்து கொண்டு
மகிழ்ச்சிகளை சுவாசமாக்கி
கதை பேசிய காலத்தில்
நிலவும் முகிலுக்குள் நீச்சலடித்து
நிறைந்திருந்தது எங்களோடு
தண்ணொளியாய் சிலிர்த்தபடி
இப்போதோ..................
மின்மினிகளின் துணையுமின்றி
வெறுமே காய்ந்து கொண்டிருக்கிறது
காட்சிப்பிழை போல
என்னுடன் வந்த அகதியாய்.
வி.அல்விற்.
31.03.2014.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக