திங்கள், 28 ஏப்ரல், 2014

காட்சிப்பிழை

மல்லிகை மணம் அவிழ்க்கும் 
பந்தலின் கீழிருந்து கொண்டு 
மகிழ்ச்சிகளை சுவாசமாக்கி
கதை பேசிய காலத்தில் 
நிலவும் முகிலுக்குள் நீச்சலடித்து
நிறைந்திருந்தது எங்களோடு 
தண்ணொளியாய் சிலிர்த்தபடி
இப்போதோ..................
மின்மினிகளின் துணையுமின்றி
வெறுமே காய்ந்து கொண்டிருக்கிறது
காட்சிப்பிழை போல
என்னுடன் வந்த அகதியாய்.

வி.அல்விற்.
31.03.2014.

கருத்துகள் இல்லை: