எத்தனிப்பு.
ஆர்ப்பரித்து ஓயாதிருக்கும்
அலைகடல் போல
நினைவுகளுள் மூழ்கி எழுகையில்
பரிதவிப்பு மட்டுமே
கைகளில் நிறைகின்றதாய்த் தெரிகிறது
மீள் புகவியலாக் கோட்டையில்
களித்திருந்த பெரும்பகுதியை
மீட்டுவிட எத்தனிக்கிறேன்
அதன் வாசலிரும்புக் கதவின்
கம்பிகளை கைகளால் இறுக்கி
கால்களால் உதைத்துத் தள்ளி
உள்ளே ஓடி விடும் அவசரம்
கண்களில் விசும்புகின்றது
தனிமையுள் ஆழும் இரவுகளும்
வெறுமையில் வாழும் பகல்களும்
எனக்கான இயல்புகளைத்
துரத்தி விட்டுள்ளதில்
சிரிப்பை ஒழித்து விட்டு
சிந்தனைகளே கோடுகளைக்
கீறி விட்டுள்ளன நிரந்தரமாக.
வி.அல்விற்.
11.04.2014.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக