திங்கள், 28 ஏப்ரல், 2014

விட்ட குறைகள்.

விட்டு வந்தவைகள்.

வலித்து வலித்துக் கைகள் 
சோர்ந்து போகின்றன 
படகுகள் கரை சேரும் 
அறிகுறி ஏதும் தென்படவில்லை 
கத்தி எழும் அலைகளும் 
சூழ்ந்திருக்கும் கும்மிருட்டும் 
அமிழ்த்தியிருக்க 
விழிகள் பிதுங்கும்படி 
பார்வையைக் கூர்மையாக்குகிறோம்
அன்றொருநாள்
கரையில் விட்டு வந்த
பாசி விளையாட்டுக்களையும்
மட்டித் தேடல்களையும்
தக்கணையான்* பொறுக்குதல்களையும்
சூள் கொளுத்துதல்*களையும்
மணலில் எழுதி விட்டு வந்த
பெயர்களையும் கண்டு பிடிப்பதற்காய்
மீண்டும் ஒருமுறை.

வி.அல்விற்.
05.04.2014.

கருத்துகள் இல்லை: