அதிர்வுகள்.
நம்மிடமிருந்து பிறந்து
வேண்டியதெல்லாம் பெற்று
தேடியதெல்லாம் கற்று
எனக்கின்று கற்றுத் தரும்
உன்னுடைய சுதந்திரத்தைப்
பறிக்காதிருப்பதும்
உன்னுடைய பொறுப்புக்களை
ஏற்றுக் கொள்வதும்
இயல்பாய் நடக்கும்
வழிப் போக்குக்கு
நம்மை இலகுவாக்குவது
கடினமாய்த்தான் இருக்கிறது
நம் நிலையிலிருந்து
நம் ஈகோவைத் தாண்டி.
வி.அல்விற்.
10.04.2014.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக