செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

உள்ளே...

காரிருள் கவிந்திருக்கும் காட்டிலே 
வெவ்வேறு உருவங்களுடன் 
முக்காடிட்டிருக்கும் மரங்கள் 
காற்றிலே அலையுறுவது போல 
உள்ளே குந்தியிருக்கின்றன 
வெளியே சொல்லத் தெரியாத 
சேர்ந்திருக்கும் பயக்குவியல்கள் 
நேற்றைய தோல்விகளின் பயங்கள்
இன்றும் தோற்று விடுவோமோவென்ற 
நிம்மதியற்ற இரவுகளின் பயங்கள் 
மனிதரை எதிர்கொள்வதில் பயங்கள்
சிக்கல்களை நோக்குவதில் பயங்கள்
நாளைய நாளை முடிப்பதற்குள்
மரணம் அண்டிவிடக் கூடாதென்ற பயம்
இன்னும் இன்னும்....
பிய்த்துக் கொண்டு வெளியே வர முடியாதபடி
வெளிச்சத்துக்குள் கால் வைக்க முடியாதபடி
இயல்பாய் நடமாட முடியாதபடி
மன இருட்டுள் தடக்குப்படுகின்றன
சின்னதும் பெரிதுமாய் பய மூட்டைகள்

வி. அல்விற்.
17.02.2014.

கருத்துகள் இல்லை: