செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

மாய மனிதன்.

என்ன மாயமிது மனிதா 
உன்னை மறந்து 
உனக்குள்ளேயே உறங்கும்
நிலைதான் என்னே! 
தானும் தனதுமாய் 
தன்னிலை முன்னிறுத்தும் 
மானிட மனமிது 
கைகுலுக்கி நட்புடன் 
நன்மைகளைப் பகிர்ந்தவன் 
தள்ளாடித் தவிக்கையில் 
தூரத்து விமர்சனங்களுடன்
துண்டித்துப் போகும்
மானிட மனமிது
அன்புக்கு வன்புடன்
இலாப நட்டத்துடன் அருகிருப்பவனை
இரக்கமின்றி விழுத்தாட்டிப் போகும்
மானிட மனமிது
மானிட தர்மங்களை
மிக இலகுவாய் மறந்து விட்டு
அரக்கத்தனமாய்
ஆனால் மிகச் சுத்தமாக
சத்தமின்றிப் பேசி சாதிக்கும்
கள்ளத்தனம் குடியிருக்கும்
மானிட மனமிது
என்ன சொல்லி என்ன பயன்
மாற்றமில்லா ஊருக்குள்
ஒருசில ஆடுகளே இங்கே
நனைந்து கொண்டிருக்கின்றன

வி.அல்விற்.
02.02.2014.

கருத்துகள் இல்லை: