ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

வாழ்த்துப் பா


வாழ்த்துப் பா 

முறைமைக்குள் வாழும் 
பெரு வாழ்வுக் கலை
அதிசயிக்க வைக்கிறது 

தனிமைக்குள் பிடிகழரா 
உறவுச் சிக்கல்களும் 
கருத்தாகிப் போகின்றன
நிரந்தரமாக 

ஒவ்வொரு இழையாகப் 
பின்னப்படும் வார்த்தைகள்
இருபக்கத் தேவைகளை 
நிறைவு செய்து முடிக்கின்றன 

கால ஓவியங்களாகி 
ஆங்காங்கே மாட்டப்படும் 
காவியங்களின் 
மறுபக்கங்கள் 
ஒளித்து வைக்கப்பட்டு
வாழ்த்துப் பா 
பாடப்படுகின்றது

வாழ்வாங்கு வாழ்ந்தமைக்காய்.

வி.அல்விற்.
08.08.2014.

கருத்துகள் இல்லை: