வாழ்த்துப் பா
முறைமைக்குள் வாழும்
பெரு வாழ்வுக் கலை
அதிசயிக்க வைக்கிறது
தனிமைக்குள் பிடிகழரா
உறவுச் சிக்கல்களும்
கருத்தாகிப் போகின்றன
நிரந்தரமாக
ஒவ்வொரு இழையாகப்
பின்னப்படும் வார்த்தைகள்
இருபக்கத் தேவைகளை
நிறைவு செய்து முடிக்கின்றன
கால ஓவியங்களாகி
ஆங்காங்கே மாட்டப்படும்
காவியங்களின்
மறுபக்கங்கள்
ஒளித்து வைக்கப்பட்டு
வாழ்த்துப் பா
பாடப்படுகின்றது
வாழ்வாங்கு வாழ்ந்தமைக்காய்.
வி.அல்விற்.
08.08.2014.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக