ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

தனிமரங்கள்.


இலையுதிர்க்கும் 
மரங்கள் கூட 
அழுவதில்லை 
அடுத்த துளிர்ப்பு 
நம்பிக்கையில் 

பிடிமானங்களின் 
உதிர்கையில் 
மனிதக் காடுகள் 
தனிமரங்களாகிக் 
கொண்டிருக்கின்றன 
இங்கே
அறிந்தும் அறியாமலுமாய்.

வி. அல்விற்.
24.08.2014.

கருத்துகள் இல்லை: